அதிமுக முன்னாள் அமைச்சர்கள் டெல்லி வந்து சென்றதே எனக்கு செய்திகள் வாயிலாக தான் தெரியும்- வானதி சீனிவாசன்…

published 1 year ago

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் டெல்லி வந்து சென்றதே எனக்கு செய்திகள் வாயிலாக தான் தெரியும்- வானதி சீனிவாசன்…

கோவை: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் டெல்லி வந்து சென்றதே எனக்கு செய்திகள் வாயிலாக தான் தெரியும் என  வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

பாஜக தேசிய மகளிரணி தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது டெல்லி சென்று வந்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது, அதற்கு பதில் அளித்த அவர் 
33 சதவீத மகளிர் இட ஒதுக்கீடு வழங்கியதற்கு பிரதமருக்கு பாராட்டு விழா நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காகவே டெல்லி சென்று இருந்ததாகவும்,  நான் பேச்சுவார்த்தையில் உடனிருந்ததாக தவறான செய்தியை சில மீடியாக்கள் வெளியிட்டிருந்ததாக தகவல்கள் வந்தது,
நேற்று மாலை முழுவதும் டெல்லியில் கட்சி பணிகளில் தான் இருந்தேன் எனவும் நான் அங்கு வேறு எந்த விசயத்திலும் இல்லை என்றார். 

மேலும் தொலைக்காட்சி செய்தியை பார்த்தும், பிறர் சொல்லியும் தான்   அதிமுக முன்னாள் அமைச்சர்கள் டெல்லி வந்து இருப்பது தெரிந்து கொண்டதாகவும் கூறினார்.  

அதிமுகவில் முன்னாள் அமைச்சர்கள் பேச்சு வார்த்தை நடத்தியதும் தெரியாது , நான் பேச்சுவார்த்தையின் போது உடன்  இருந்ததாக சொல்வது முற்றிலும் தவறான கருத்து எனவும்

பா.ஜ.க 
மகளிர் அணி தலைவராக பிரதமரின் பாராட்டு விழாவை முன்னின்று நடத்துவது தொடர்பாகவே டெல்லி சென்றேன் எனவும் கூட்டணி தொடர்பான விவகாரங்களில் தேசிய தலைமை மட்டுமே முடிவு எடுக்கும் என  தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe