வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பெண்ணிடம் தகராறு

published 1 year ago

வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பெண்ணிடம் தகராறு

கோவை: கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் ரோடு சர்ச் தெருவை சேர்ந்தவர் நாகராஜன் மனைவி சரோஜினி(40). துணிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்தார்.

அப்போது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த வாலிபர் ஒருவர் சரோஜினியிடம் தகராறில் ஈடுபட்டார். பின்னர் அங்கிருந்த சிசிடிவி கேமராவை அடித்து உடைத்தார். இதனை தட்டிக்கேட்ட நாகராஜனை தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்தார். இது குறித்து சரோஜினி குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து சிசிடிவி கேமராவை உடைத்தது அதேபகுதியை சேர்ந்த ராஜேஷ்குமார்(38) என்பதும், அவர் குடிபோதையில் முன் விரோதம் காரணமாக இதில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe