மூதாட்டியை பின் தொடர்ந்து வந்து செயினை பறித்து சென்ற நபர்- பரபரப்பு சிசிடிவி காட்சிகள்...

published 1 year ago

மூதாட்டியை பின் தொடர்ந்து வந்து செயினை பறித்து சென்ற நபர்- பரபரப்பு சிசிடிவி காட்சிகள்...

கோவை: கோவையில் நடந்து சென்று கொண்டு இருந்த மூதாட்டியை, பின்தொடர்ந்த நபர் மூதாட்டியின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறித்துச்  செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

கோவை சின்னியம்பாளையம் பி.எல். எஸ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பானுமதி(68). பானுமதி நேற்று காலை 11 மணி அளவில் தனது வீட்டுக்கு அருகில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டு, திரும்பி கொண்டு இருந்தார்.

அப்போது பானுமதியை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர், பானுமதி அணிந்து இருந்த ஒரு பவுன் தங்க சங்கிலியை பறித்துகொண்டு தப்பி ஓடினார்.

இந்த காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதில் பானுமதி நடந்து செல்வதும், பின் தொடர்ந்து வரும் நபர் பானுமதியின் கழுத்தில் இருந்து சங்கிலியை பறித்து செல்வதும் தெளிவாக பதிவாகியுள்ளது. இது குறித்து பானுமதி பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வீடியோவை காண லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://www.youtube.com/watch?v=bo8fRAIdwWw

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe