காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கதர் அங்காடியில் முதல் விற்பனையை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்…

published 1 year ago

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கதர் அங்காடியில் முதல் விற்பனையை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்…

கோவை: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கதர் அங்காடியில் முதல் விற்பனையை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

மகாத்மா காந்தியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பல்வேறு இடங்களில் அவரது சிலைகள் மற்றும் புகைப்படங்களுக்கு பல்வேறு தரப்பினரும் மரியாதை செலுத்தி வருகின்றனர். இன்றைய தினம் அரசு சார்பிலும் கிராம சபை கூட்டங்கள் நடைபெறும்.

இந்நிலையில் கோவை அவிநாசி சாலை மேம்பாலம் அருகில் உள்ள கதர் அங்காடியில் காந்தியடிகளின் பிறந்தநாளை முன்னிட்டு முதல் விற்பனையை கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் துவக்கி வைத்தார். மேலும் இந்நிகழ்வில் அங்கு இருந்த காந்தியடிகளின் சிலைக்கு கைத்தறி மாலையை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

பின்னர் அங்கு அமைக்கப்பட்டுள்ள காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்பட கண்காட்சியினை பார்வையிட்டார்.

இந்நிகழ்வில் கதர் கிராம தொழில் உதவி இயக்குனர் கிரி அய்யப்பன், கைத்தறித்துறை உதவி இயக்குனர் சிவக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe