ஆசிரியர்கள் கைது கண்டித்து பகுதிநேர சிறப்பாசிரியர்கள் ஆர்ப்பாட்டம்…

published 1 year ago

ஆசிரியர்கள் கைது கண்டித்து பகுதிநேர சிறப்பாசிரியர்கள் ஆர்ப்பாட்டம்…

கோவை: சென்னை டிபிஐ வளாகத்தில் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 11 நாட்களாக பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த ஆசிரியர்கள் கைது நடவடிக்கை கண்டித்தும், பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, கோவை  செஞ்சிலுவை சங்கம் முன்பு முன்பு தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதில், சென்னையில் பகுதி நேர ஆசிரியர்களை காவல்துறை துன்புறுத்தி மனிதாபிமானமற்ற முறையில் கைது செய்ததை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதில், தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்க மாநில செயலாளர் ராஜா தேவ காந்த் தலைமை வகித்தார்.
மாவட்ட பொறுப்பாளர்கள் தியாகராஜன், ஆனந்தகுமார் ,ஆனந்தராஜ், சுதாகர், விக்டோரியா, அருணா, கிருத்திகா உள்பட 250 மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். 
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe