கோவையில் 121 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் இருவர் கைது

published 1 year ago

கோவையில் 121 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் இருவர் கைது

 

கோவை:
கோவையில் 161 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது செய்துள்ளனர்.


கோவையில் மளிகைக்கடைகள், பெட்டிக்கடைகளில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என போலீசார் சோதனை செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

 இந்நிலையில், ஆர்.எஸ்.புரம் சிரியன் சர்ச் ரோட்டில் மாநகராட்சி பள்ளி பின்புறம் பொதுக்கழிப்பிடம் அருகே சிலர் குட்காவை பதுக்கி விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

அதன்பேரில், போலீசார் நேற்று அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு 2 பேர் தடைசெய்யப்பட்ட குட்காவை விற்பனை செய்தது தெரியவந்தது.

 இதனையடுத்து போலீசார் குட்கா விற்ற ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த நபராம்(25), தினேஷ்(24) ஆகிய இருவரை கைது செய்தனர். 

அவர்களிடம் இருந்து 161 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe