மீன் வெட்டும் தொழிலாளியை தாக்கிய சக தொழிலாளிகள் இருவர் கைது...

published 1 year ago

மீன் வெட்டும் தொழிலாளியை தாக்கிய சக தொழிலாளிகள் இருவர் கைது...

கோவை: மீன் வெட்டும் தொழிலாளியை தாக்கிய சக தொழிலாளிகள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

கோவை தெற்கு உக்கடம் புல்லுக்காடு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் அப்துல் ரகுமான்(18). மீன் வெட்டும் தொழிலாளி. இவர் நேற்று புல்லுக்காடு மார்க்கெட்டில் மீன் வெட்டி சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மீன் சுத்தம் செய்யும் தொழிலாளிகள் சிலருக்கும், அப்துல் ரகுமானுக்கும் இடையே தகராறு எழுந்தது. அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த 2 பேர் தகாத வார்த்தைகளால் பேசி அப்துல்ரகுமானை தாக்கினர். இது குறித்து அவர் கடைவீதி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்துல் ரகுமானை தாக்கிய மீன் வெட்டும் தொழிலாளிகள் குனியமுத்தூரை சேர்ந்த அஜ்மல்(20), தெற்கு உக்கடத்தை சேர்ந்த சபீல்(19) ஆகிய இருவரை கைது செய்தனர். பின்னர் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe