ராமநாதபுரத்தில் சாலையில் நடந்த சென்ற பெண் ஐடி ஊழியரிடம் சில்மிஷம்

published 1 year ago

ராமநாதபுரத்தில் சாலையில் நடந்த சென்ற பெண் ஐடி ஊழியரிடம் சில்மிஷம்

கோவை: கோவையில் சாலையில் நடந்து சென்ற ஐடி பெண் ஊழியரை தொட்டு பாலியல் சில்மிஷம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண், ஐடி ஊழியர். இவர் நேற்று ராமநாதபுரம் காமராஜர் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த வாலிபர் ஒருவர் திடீரென இளம்பெண்ணை தொட்டு பாலியல் சில்மிஷம் செய்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கூச்சல் போட்டார். சத்தம் கேட்டு ஓடி வந்த சிலர் அந்த வாலிபரை மடக்கி பிடித்து ராமநாதபுரம் போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில், சாலையில் நடந்து சென்ற இளம்பெண்ணை தொட்டு பாலியல் சில்மிஷம் செய்தது காந்திபுரம் 4வது வீதியை சேர்ந்த டிரைவர் சுரேஷ்குமார் (29) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe