சரவணம்பட்டியில் வழிப்பறி

published 1 year ago

சரவணம்பட்டியில் வழிப்பறி

கோவை: கோவை சரவணம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(25). எலக்ட்ரீசியன். இவர் நேற்று தனது நண்பர் ஒருவருடன் சின்னவேடம்பட்டி ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த வாலிபர் ஒருவர் அவர்களை வழிமறித்தார்.

பின்னர் சுரேஷ்குமாரிடம், மது குடிக்க பணம் தருமாறு கேட்டார். அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் கத்தி முனையில் அவரை மிரட்டி ரூ. 500 ஐ பறித்து சென்றார். இதனால் அதிர்ச்சியடைந்த சுரேஷ்குமார் இது குறித்து சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். கத்தி முனையில் மிரட்டி பணம் பறித்தது கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் மாலில் சேல்ஸ்மேனாக பணிபுரியும் பழனியை சேர்ந்த யுவராஜ்(22) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe