தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க கோரி எச்.எம்.எஸ். கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்…

published 1 year ago

தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க கோரி எச்.எம்.எஸ். கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்…

கோவை:  கட்டுமான மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இந்து மஸ்தூர் சபா(HMS) சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்துக கு HMS மாநில துணைத்தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் இராஜாமணி, மாநில செயற்குழு உறுப்பினர் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
இந்த ஆர்ப்பாட்டத்தில், "கட்டுமான மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களில் வாரியத்தில் பதிவு செய்த அனைவருக்கும் தீபாவளி போனஸ் 7 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். பதிவு செய்து புதுப்பிக்கப்படாத தொழிலாளர்களுக்கும் புதிதாக சேரக்கூடிய தொழிலாளர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வாரியத்தின் பயன்கள் அடைந்திடவும், வயதான காலத்தில் சமூக பாதுகாப்பு கிடைத்திடும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். வீடு கட்ட மானியம் பெறுவதற்கான நடைமுறையை எளிமையாக்க வேண்டும், அனைத்து நல வாரியங்களும் ஒரே மாதிரியான இணையதள நடைமுறையை பின்பற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe