5.95 லட்ச ரூபாய் வாங்கி மோசடி செய்த பெண் உட்பட இருவர் மீது வழக்கு…

published 1 year ago

5.95 லட்ச ரூபாய் வாங்கி மோசடி செய்த பெண் உட்பட இருவர் மீது வழக்கு…

கோவை: 5.95 லட்ச ரூபாய் வாங்கி மோசடி செய்த பெண் உட்பட இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை போத்தனூர் பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் துணை மண்டல மேலாளராக பணியாற்றி வருபவர் ஜெகன்(35).  இவர் போத்தனூர் போலீசில் அளித்துள்ள புகாரில் எங்களது நிதி நிறுவனத்திற்கு கோவை வெள்ளலூர் மகாகணபதி நகர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் மனைவி தர்ஷனா (28 ) என்பவர் வந்தார்‌  அவர் தன்னிடம் 22 பவுன் தங்க நகை இருப்பதாகவும் அந்த தங்க நகைகள் வங்கியில் அடமானம் வைத்திருப்பதாகவும் அந்த நகையை மீட்டு தர வேண்டும் . நகையை மீட்க 5.95 லட்ச ரூபாய் தேவை என கூறினார் அவருக்கு தங்க நகை மீட்டுத் தர பணம் தருவதற்கு எங்களது நிதி நிறுவன நிர்வாகிகள் ஒப்புக்கொண்டு பணம் கொடுத்தனர்.

இந்த நிலையில் தர்ஷனா நிதி நிறுவனத்தில் இருந்து உரிய பணத்தை வாங்கிக் கொண்டு சென்றார்.  ஆனால் நகை மீட்டு எங்களிடம் ஒப்படைக்கவில்லை. இதற்கு நிதி நிறுவனத்தில் பணியாற்றும் மேலாளர் சுரேஷ்  உடந்தையாக இருந்துள்ளார் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார் இதன் அடிப்படையில் போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe