கோவை குண்டு வெடிப்பில் கைதான அல்-உம்மா இயக்க தலைவர் தனியார் மருத்துவமனையில் அனுமதி...

published 1 year ago

கோவை குண்டு வெடிப்பில் கைதான அல்-உம்மா இயக்க தலைவர் தனியார் மருத்துவமனையில் அனுமதி...

கோவை: கோவை மாநகரில் கடந்த 1998ம் ஆண்டு தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் அல்- உம்மா இயக்க தலைவர் கோவை தெற்கு உக்கடம் அன்பு நகரை சேர்ந்த பாஷா(83) கைது செய்யப்பட்டார். அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த சில ஆண்டுகளாக சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் காரணமாக சிறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் கடந்த 16ம் தேதி இரவு திடீரென அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனால் சிறை போலீசார் அவரை பலத்த பாதுகாப்புடன் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து அனுமதித்தனர். 

இதைத் தொடர்ந்து அவர் தனது உடல் நலத்தை காரணம் காட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி அவருக்கு 30 நாட்கள் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். 

இந்நிலையில், நேற்று இவரை உயர் ரத்த அழுத்த பாதிப்பு காரணமாக அவரது குடும்பத்தினர் கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தனியார்  மருத்துவமனையில் சிகிச்சைக்காக  சேர்த்தனர். டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் மருத்துவமனையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe