தொழிலாளியிடம் பணம் பறித்த வாலிபர் கைது…

published 1 year ago

தொழிலாளியிடம் பணம் பறித்த வாலிபர் கைது…

கோவை: கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் ஜேசு மாணிக்கம்(43). தொழிலாளி. இவர் நேற்று குனியமுத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே தனது நண்பர் ஒருவருடன் பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் ஜேசு மாணிக்கத்திடம் பணம் கேட்டார். அவர் கொடுக்க மறுத்ததால் கத்தி முனையில் அவரை மிரட்டி அவரிடம் இருந்த ரூ. 500 ஐ பறித்து சென்றார். 

இது குறித்து ஜேசு மாணிக்கம் குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், தொழிலாளியை மிரட்டி பணம் பறித்தது செல்வபுரம் தெலுங்கு பாளையம் சாஸ்தா நகரை சேர்ந்த ரஞ்சித் குரு(28) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe