வேலைக்கு சென்ற இடத்தில் திருட்டில் ஈடுபட்ட பெண் கைது...

published 1 year ago

வேலைக்கு சென்ற இடத்தில் திருட்டில் ஈடுபட்ட பெண் கைது...

கோவை: கோவையில் வீட்டு வேலைக்கு சென்ற இடத்தில் பட்டு சேலை, ஐ போன் திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

கோவை சாயிபாபா காலனி பாரதி பார்க்கை சேர்ந்தவர் ராமலட்சுமி(41). இவரது தாய்க்கு உடல்நலம் சரியில்லாததால் திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த சுதாமேரி(33) என்பவரை வீட்டு வேலைக்கு அமர்த்தியிருந்தார். இந்நிலையில், வீட்டில் இருந்த 7 பட்டு சேலை, ஒரு ஐபோன், ஐபேடு ஆகியவற்றை காணவில்லை. இவற்றின் மதிப்பு ரூ. 2.40 லட்சம் ஆகும். வீட்டு வேலைக்கு வந்த சுதாமேரியும் மாயமாகி விட்டார். 

இது குறித்து ராமலட்சுமி சாயிபாபா காலனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மேலும் வீட்டில் இருந்த சிசிடிவி காமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், வீட்டில் ரூ. 2.40 லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடியது சுதா மேரி என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe