செல்வபுரத்தில் ஆட்டை திருடி ஆட்டோவில் போட்டு எஸ்கேப்..

published 1 year ago

செல்வபுரத்தில் ஆட்டை திருடி ஆட்டோவில் போட்டு எஸ்கேப்..

கோவை: கோவை செல்வபுரம் கல்லாமேட்டை சேர்ந்தவர் சுரேஷ்(33). இவர் 27 ஆடுகளை வளர்த்து வருகிறார். தினமும் காலை மேய்ச்சலுக்கு ஆட்டை அழைத்து சென்று மாலையில் வீடு திரும்புவது வழக்கம். இந்நிலையில், நேற்று கல்லாமேடு பகுதியில் ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தது.

அப்போது ஆட்டோவில் வந்த 2 பேர் திடீரென 2 ஆடுகளை திருடி ஆட்டோவில் போட்டு கொண்டு சென்று விட்டனர். ஆடுகள் குறைந்தது கண்டு அதிர்ச்சியடைந்த சுரேஷ் அக்கம்பக்கத்தில் தேடி பார்த்தார். ஆனால் எங்கும் காணவில்லை. இது குறித்து சுரேஷ் செல்வபுரம் போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், ரூ. 40 ஆயிரம் மதிப்பிலான ஆடுகளை திருடியது போத்தனூரை கறிக்கடை ஊழியர்கள் இரண்டு பேர் என்பது தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe