கோவையில் கத்தி முனையில் பணம் பறித்த சிறுவர்கள்

published 1 year ago

கோவையில் கத்தி முனையில் பணம் பறித்த சிறுவர்கள்

கோவை: கோவை உப்பிலிபாளையம் காந்திபுதூரை சேர்ந்தவர் பிரகாஷ்(31). மீன் கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று அவிநாசி ரோடு சின்னியம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரே வந்த 2 பேர் அவரை வழிமறித்தனர். பின்னர் கத்திமுனையில், அவரிடம் இருந்த ரூ. 5 ஆயிரத்தை பறித்து கொண்டு தப்பி சென்றனர். இது குறித்து பிரகாஷ் பீளமேடு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

அதில், பணம் பறித்தது சின்னியம்பாளையத்தை சேர்ந்த 17 மற்றும் 18 வயதுடைய 2 சிறுவர்கள் என்பது தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe