கோவையில் கத்தியை காட்டி மிரட்டி இளம்பெண்ணிடம் நகை பறிப்பு

published 1 year ago

கோவையில் கத்தியை காட்டி மிரட்டி இளம்பெண்ணிடம் நகை பறிப்பு

கோவை: கோவையில் கத்தியை காட்டி மிரட்டி இளம்பெண்ணிடம் நகை பறித்த ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

திருப்பூரை சேர்ந்தவர் மணிமேகலை(26). இவர் கோவையில் உள்ள நிறுவனத்தில் டிசைனிங் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு மணிமேகலை ஆர்.எஸ்.புரம் ஸ்ரீ சக்தி முத்துமாரியம்மன் கோயில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த ஒரு நபர் மணிமேகலையை வழிமறித்தார். பின்னர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரின் கழுத்தில் வைத்து நகையை கழட்டி கொடுக்குமாறு மிரட்டினார். அவர் கொடுக்க மறுத்ததால் தங்க செயினை பறிக்க முயன்றார். இதில் செயினின் ஒன்றரை கிராம் டாலரை அந்த நபர் பறித்தார்.

மீதமுள்ள நகை தப்பியது. இதனால் அதிர்ச்சியடைந்த மணிமேகலை சத்தம் போட்டார். அக்கம்பக்கத்தினர் ஓடி வருவதற்குள் அந்த நபர் நகையுடன் தப்பி சென்று விட்டார். இது குறித்து மணிமேகலை ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்த நபரை தேடி வருகின்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe