ரத்தினபுரியில் வாலிபரை கத்தியால் வெட்டி பணம் செல்போன் பறிப்பு

published 1 year ago

ரத்தினபுரியில் வாலிபரை கத்தியால் வெட்டி பணம் செல்போன் பறிப்பு

கோவை: கோவையில் வாலிபரை கத்தியால் வெட்டி பணம், செல்போன் பறித்து சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை ரத்தினபுரி சம்பத் தெருவை சேர்ந்தவர் சூர்யா(25). தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று முன்தினம் சம்பத் தெருவில் உள்ள கோழி கடைக்கு சிக்கன் வாங்க சென்றார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் சூர்யாவிடம் மது குடிக்க பணம் கேட்டார்.

அவர் கொடுக்க மறுத்தததால் ஆத்திரமடைந்த அந்த நபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சூர்யாவின் கையில் வெட்டினார். பின்னர் அவரிடம் இருந்த ரூ. ஆயிரம் மற்றும் செல்போனை பறித்தார். இதனை பார்த்த சிக்கன் கடை ஊழியர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் அந்த நபரை பிடிக்க முயன்றனர்.

ஆனால் அவர்களையும் மிரட்டி அந்த நபர் தப்பி சென்றார். கத்தியால் வெட்டியதில் காயமடைந்த சூர்யாவை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், வாலிபரை கத்தியால் வெட்டி பணம், செல்போன் பறித்து தப்பியது ரத்தினபுரி கண்ணப்ப நகரை சேர்ந்த கிறிஸ்டோபர்(30) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe