காதலியின் தாயை கத்தியால் குத்திய வாலிபர் கைது...

published 1 year ago

காதலியின் தாயை கத்தியால் குத்திய வாலிபர் கைது...

கோவை: கோவையில் காதலியின் தாயை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்தவர் 35 வயது பெண். இவரது மகளை அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ்வரன் (21) என்பவர் கடந்த 2 ஆண்டாக காதலித்து வந்தார். ஆனால், அவரின் நடவடிக்கை பிடிக்காததால், விக்னேஷ்வரனுடன் பேசுவதையும், பழகுவதையும் அவரது காதலி தவிர்த்து வந்தார். இதனால், அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு எழுந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் விக்னேஷ்வரன் காதலி வீட்டுக்கு சென்றார். ஏன் என்னுடன் பேச மாட்டாயா? என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு வந்த காதலியின் தாய் அந்த வாலிபரை கண்டித்தார். இதனால், ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த விக்னேஷ்வரன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் காதலியின் தாயாரை குத்தினார். இதில், அவருக்கு வயிற்றில் காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து செல்வபுரம் போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீசார் தாக்குதல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து செல்வபுரம் ராமமூர்த்தி ரோட்டை சேர்ந்த விக்னேஷ்வரனை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe