செல்போன் பறித்த வாலிபர் கைது…

published 1 year ago

செல்போன் பறித்த வாலிபர் கைது…

கோவை: கோவை செல்வபுரம் இந்திரா நகரை சேர்ந்தவர் சபரிநாதன்(34). நகைப்பட்டறை ஊழியர். இவர் நேற்று முன்தினம் பைக்கில் திருச்சி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் பைக்கில் பின்தொடர்ந்து வந்த வாலிபர் ஒருவர் அவரை வழிமறித்தார். 

பின்னர் கத்திமுனையில் அவரை மிரட்டி அவரிடம் இருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பினார். புகாரின் பேரில், ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், செல்போன் பறித்தது கோவை மணியக்காரன்பாளையம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த டேவிட் ராஜா(22) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe