கோவையில் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.20.20 லட்சம் மோசடி…

published 1 year ago

கோவையில் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.20.20 லட்சம் மோசடி…

கோவை: கோவையில் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.20.20 லட்சம் மோசடி செய்ததாக 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கோவை சவுரிபாளையம் அண்ணாமலை நகரை சேர்ந்தவர் மாணிக்கம் (27), தனியார் நிறுவன மேலாளர். இவர் அரசு வேலை பெற முயற்சி செய்து வந்துள்ளார். அப்போது கோவையை சேர்ந்த ரஞ்சித், ஜெகன், சூர்யா, மோகன் ஆகிய 4பேர் மாணிக்கத்துக்கு அறிமுகம் ஆகியுள்ளனர்.

அவர்கள் அரசு துறையில் பலரை தங்களுக்கு தெரியும், அவர்கள் மூலம் பலருக்கு அரசு வேலை வாங்கி கொடுத்துள்ளோம் என மாணிக்கத்திடம் கூறியுள்ளனர். இதை நம்பிய மாணிக்கம் மற்றும் சிலர் அவர்களிடம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ரூ.20.20 லட்சம் கொடுத்துள்ளனர்.

ஆனால், அவர்கள் கூறியபடி அரசு வேலை வாங்கி தரவில்லை. பணத்தை திருப்பி கேட்டும் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இதுகுறித்து பீளமேடு போலீசில் மாணிக்கம் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் ரஞ்சித், ஜெகன், சூர்யா, மோகன் ஆகிய 4 பேர் மீதும் நம்பிக்கை மோசடி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe