குறிச்சி அரவான் திருவிழா நடத்துவதற்கு தடையாக உள்ள நபர்கள்- உரிய நடவடிக்கை எடுக்கும்படி ஒருங்கிணைப்புக்குழு மனு…

published 1 year ago

குறிச்சி அரவான் திருவிழா நடத்துவதற்கு தடையாக உள்ள நபர்கள்- உரிய நடவடிக்கை எடுக்கும்படி ஒருங்கிணைப்புக்குழு மனு…

கோவை: கோவை குறிச்சி பகுதியில் ஆண்டுதோறும்  அரவான் திருவிழா நடைபெற்று வருகிறது. பல வருடங்களாக 16 சமுதாய மக்கள் ஒன்றிணைந்து இந்த அரவான் திருவிழாவை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்தத் திருவிழாவை நடத்த வேண்டிய நிர்வாகிகளில் ஒரு சிலர் தடையாக இருப்பதாகவும் அவர்களிடம் விசாரணை நடத்திட வேண்டியும் குறிச்சி அரவான் ஒருங்கிணைப்பு குழுவினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

இது குறித்த அவர்கள் அளித்துள்ள மனுவில், இந்த திருவிழா நடத்துவதற்கு கூட்டத்தை அறிவிக்க வேண்டிய ஊர் கவுண்டர் பத்மகுமார் அவர் சொல்லும் படியாக மற்ற சமூகத்தினர்  கேட்டால் மட்டுமே தேதியை அறிவிப்பேன் எனக் கூறுவதாகவும் கணக்குப் பிழையான மரகதம் பிள்ளை தனது வீட்டிற்கு வந்தால் மட்டுமே நான் கலந்து கொள்வேன் என்கிறார் என குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் தேவர் சமூகத்தில் மூன்று பேர் நாங்கள் தான் தேவர் சமூகப் பிரதிநிதி(முக்கந்தர்) என்கின்றனர் என குறிப்பிட்டுள்ள அவர்கள் இந்த நபர்களால் அவர்கள் சார்ந்த சமூகத்தினர் திருவிழா நடக்க வேண்டும் என்று நினைத்தாலும் இவர்கள் தடையாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

எனவே திருவிழாவிற்கு தடையாக உள்ள இவர்களை முறையாக விசாரித்து திருவிழா நடத்திட நிர்வாக ரீதியாகவும் சட்டரீதியாகவும் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe