தொழிலை விரிவு படுத்துவதாக கூறி தொழில் அதிபரிடம் ரூ.53 லட்சம் மோசடி...

published 1 year ago

தொழிலை விரிவு படுத்துவதாக கூறி தொழில் அதிபரிடம் ரூ.53 லட்சம் மோசடி...

கோவை: கோவையில் தொழிலை விரிவு படுத்துவதாக கூறி தொழில் அதிபரிடம் ரூ. 53 லட்சம் மோசடி செய்ததாக தம்பதியினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கோவை அடுத்த சின்ன தடாகம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சுகுமார்(53). சொந்த தொழில் செய்து வருகிறார். இவர் கோவை வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:-

கோவை வடவள்ளி இடையர்பாளையம் ரோடு அண்ணாநகரை சேர்ந்தவர் ரகுநாத். ஸ்டேசனரி கடை நடத்தி வருகிறார். எனக்கு நட்பு ரீதியாக பழக்கமான அவர் கடந்த 2016ம் ஆண்டு தனது தொழிலை விரிவு படுத்த வேண்டும் எனவும், வங்கி கடனை அடைக்க வேண்டும் எனவும் பணம் கேட்டார். நம்பிக்கையின் பேரில், அவரிடம் ரூ. 53 லட்சம் கொடுத்தேன். ஆனால் அதற்கு அவர் சில மாதங்கள் வரை வட்டி கொடுத்தார். ஆனால் அதன்பின்பு வட்டியும், அசல் தொகையையும் திருப்பி செலுத்தாமல் காலம் கடத்தி வருகிறார். இது குறித்து அவரிடம் கேட்டபோது, தனது வீட்டை விற்று கடனை அடைத்து விடுவதாக தெரிவித்தார். ஆனால் பலமுறை கேட்டும் அவர் பணம் கொடுக்கவில்லை. மேலும் ரகுநாத் வீட்டை விற்க அவரது மனைவி சுசித்ராவிடம் பவர் பத்திரம் எழுதி கொடுத்து விட்டு வெளிநாடு செல்ல திட்டமிடுவதாக தெரிகிறது. எனவே ரூ. 53 லட்சம் மோசடி செய்த ரகுநாத் மற்றும் அவரது மனைவி சுசித்ரா மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு அவர் தனது புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

புகாரின் பேரில், போலீசார் ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி ஆகிய இரு பிரிவுகளின் கீழ் ரகுநாத், அவரது மனைவி சுசித்ரா ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe