சிமெண்ட் கம்பெனி ஊழியரை தாக்கிய லாரி டிரைவர்கள் 3 பேர் கைது…

published 1 year ago

சிமெண்ட் கம்பெனி ஊழியரை தாக்கிய லாரி டிரைவர்கள் 3 பேர் கைது…

கோவை: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லி புத்தூரை சேர்ந்தவர் சிவக்குமார்(23). இவர் கோவையில் தங்கி இருகூரில் உள்ள சிமெண்ட் கம்பெனி அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு, இதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் லாரி டிரைவர்கள் பல்லடத்தை சேர்ந்த லாரி டிரைவர் தீனதயாளன்(39), சிவகங்கையை சேர்ந்த டிரைவர் அப்துல்கரீம்(40) உள்ளிட்ட சில லாரி டிரைவர்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. பில் போட்டு லாரியை குறிப்பிட்ட இடத்துக்கு அனுப்புவதில், சிவக்குமாருக்கும், அவர்களுக்கும் இடையே மோதல் இருந்தது. 

இந்நிலையில், நேற்று சிவக்குமார் அலுவலகத்தில் பணியில் இருந்தார். அப்போது அங்கு வந்த லாரி டிரைவர்கள் சிலருக்கும், சிவக்குமாருக்கும் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த லாரி டிரைவர்கள் சிலர் தகாத வார்த்தைகளால் பேசி சிவக்குமாரை அடித்து உதைத்தனர். இதில் காயமடைந்த சிவக்குமாரை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து சிவக்குமார் சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர்கள் தீனதயாளன், அப்துல் கரீம்(40), சரவணன்(33) ஆகிய 3 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதேபோல், லாரி டிரைவர் ராஜ்குமார்(34) என்பவர் சிவக்குமார் தன்னை தாக்கியதாக அளித்த புகாரின் பேரில், சிவக்குமார் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe