மது போதையில் வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர் மீது தாக்குதல்- இருவர் கைது...

published 1 year ago

மது போதையில் வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர் மீது தாக்குதல்- இருவர் கைது...

கோவை: கோவை ஒண்டிப்புதூர் கருமாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார்(36). சிமெண்ட் கம்பெனி ஊழியர். இவர் நேற்று பைக்கில் இருகூர் அங்காளம்மன் கோயில் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது குடிபோதையில் வந்த கும்பல் சதீஷ்குமாரை வழிமறித்து தகராறு செய்தனர். 

வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த தகாத வார்த்தைகளால் பேசி சதீஷ்குமாரை அடித்து உதைத்தனர். இது குறித்து சதீஷ்குமார் சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் சதீஷ்குமாரை தாக்கியது இருகூர் பகுதியை சேர்ந்த டிரைவர் பிரவீன்ராஜ்(21), கூலி தொழிலாளி ராஜ்குமார்(25), சூரியபிரகாஷ்(22) என்பது தெரியவந்தது. போலீசார் 3 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe