இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக ஆர்.டி.ஓ விசாரணை...

published 1 year ago

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக ஆர்.டி.ஓ விசாரணை...

கோவை: கோவையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக ஆர்.டி.ஓ விசாரணை நடந்து வருகிறது.

கோவை சரவணம்பட்டி சிவானந்தபுரம் மேற்கு ஜனதா நகரை சேர்ந்தவர் ஸ்ரீராம். இவரது மனைவி ரின்சி (29). கருத்து வேறுபாடு காரணமாக, கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால், ரின்சி பாலக்காட்டில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு செல்வதும், பின்னர் அவர்கள் சமாதானம் செய்த பின்னர் கோவை வந்து தனது கணவருடன் வாழ்வதும் வழக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது. ரின்சி கடந்த சில நாட்களாக கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். 

இந்நிலையில், வாழ்க்கையில் விரக்தியடைந்த ரின்சி சம்பவத்தன்று இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும் திருமணம் ஆகி சில ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe