செல்போன் திருடிய வாலிபர் கைது…

published 1 year ago

செல்போன் திருடிய வாலிபர் கைது…

கோவை: தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தை சேர்ந்தவர் ரவிசங்கர்(50). டிரைவர். இவர் நேற்று தூத்துக்குடி செல்வதற்காக சிங்காநல்லூர் பஸ் நிலையத்தில் காத்திருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் திடீரென ரவிசங்கரின் பாக்கெட்டில் இருந்த செல்போனை திருடி கொண்டு தப்பி ஓடினார். அவரை பிடிக்க ரவிசங்கர் துரத்தினார். ஆனால் அவரை காணவில்லை. சிறிது நேரம் கழித்து செல்போன் திருடிய வாலிபர் அங்குள்ள டாஸ்மாக் கடை அருகே நின்றிருந்தார். 

உடனே ரவிசங்கர் இது குறித்து சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அதில் செல்போன் திருடியது கோவை எஸ்ஐஎச்எஸ் காலனி கண்ணபிரான் நகரை சேர்ந்த அஜித்(23) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe