கோவையில் ஜோதிடம் பார்த்துவிட்டு திரும்பியவர் பரிதாப பலி

published 1 year ago

கோவையில் ஜோதிடம் பார்த்துவிட்டு திரும்பியவர் பரிதாப பலி

கோவை: கோவையில் ஜோதிடம் பார்த்துவிட்டு மொப்பட்டில் வீடு திரும்பிய வாலிபர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

துடியலூர் அருகே உள்ள காந்தி நகரை சேர்ந்தவர் சின்னத்தம்பி (27). இவரது சித்தப்பா மகன் அதே பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(28).  இவர்கள் இருவரும் ஜோதிடர். பக்கத்து ஊர்களுக்கு சென்று ஜோதிடம் பார்த்து வருவது வழக்கம்.

இந்நிலையில் நேற்று இருவரும் மொபட்டில் ஆனைகட்டிக்கு ஜோதிடம் பார்க்க சென்றனர். அங்கு ஜோதிடம் பார்த்துவிட்டு மொபட்டில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். மொபட்டை மணிகண்டன் ஓட்ட சின்னத்தம்பி பின்னால் உட்கார்ந்து இருந்தார்.

அவர்கள் ஆனைகட்டி ரோடு மாங்கரை அருகே வந்த போது எதிரே வந்த பைக்கும் - மொபட்டும் மோதியது. இந்த விபத்தில் பைக்கில் வந்த இரண்டு பேர் உட்பட 4 பேர் பலத்த காயம் அடைந்தனர்.  அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சின்னத்தம்பி பரிதாபமாக உயிரிழந்தார்.

மணிகண்டன் மற்றும் பைக்கில் வந்த உக்கடத்தை சேர்ந்த கோகுல்ராஜ்(23). நிசாந்த் ஆகிய 3 பேரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து தடாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe