துணிக்கடையில் வாக்குவாதம்- 3 பேர் கைது...

published 1 year ago

துணிக்கடையில் வாக்குவாதம்- 3 பேர் கைது...

கோவை: கோவை உக்கடத்தை சேர்ந்தவர் ஜியா உல் ஹக்(31). இவர் ஒப்பணக்கார வீதியில் துணிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று சிலர் இவரது கடையில் துணி எடுத்து சென்றனர். பின்னர் சிறிது நேரம் கழித்து கடைக்கு வந்த அவர்கள் தாங்கள் எடுத்து சென்ற துணி பொருத்தமாக இல்லை, வேறு துணியை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். உடனே ஜியா உல் ஹக் வேறு உடைகளை எடுத்து காண்பித்தார். அதற்கு அவர்கள் எங்களுக்கு திருப்தி இல்லை. பணத்தை திருப்பி கொடுத்துவிடுமாறு கேட்டுள்ளனர். அதற்கு ஜியா உல் ஹக் பணத்தை திருப்பி தர முடியாது, துணியை மாற்றி தருகிறேன் என கூறியுள்ளார். 

இதில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த அவர்கள் தகாத வார்த்தைகளால் பேசி ஜியா உல் ஹக்கை தாக்கினர். இதில் காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து உக்கடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், ஜியா உல் ஹக்கை தாக்கியது கோவை தெற்கு உக்கடத்தை சேர்ந்த ஆசிப் கான்(36), அல் அமீன் காலனியை சேர்ந்த அப்ரார்(30), யூசுப்கான்(35) என்பது தெரியவந்தது. போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe