பாசி நிதி நிறுவன வழக்கில் தன்னை விடுவிக்க கோரி முன்னாள் ஐஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி...

published 1 year ago

பாசி நிதி நிறுவன வழக்கில் தன்னை விடுவிக்க கோரி முன்னாள் ஐஜி  தாக்கல் செய்த மனு தள்ளுபடி...

கோவை: பாசி நிதி நிறுவன வழக்கில் தன்னை விடுவிக்க கோரி முன்னாள் ஐஜி  தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த பாசி நிதி நிறுவனம் மக்களின் 930 கோடி பணத்தை மோசடி செய்தது. இந்த வழக்கில் 
பாசி நிதி  அந்நிறுவனத்தின் பெண் இயக்குநர் கமலவள்ளியை கடத்தி பணம் பறித்ததாக அப்போதைய மேற்கு மண்டல ஐஜி பிரமோத் குமார் உட்பட 5 பேர் மீது  சிபிஐ கடந்த 2011 ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கு விசாரணை கோவை சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
ஐஜி பிரமோத் குமார் உட்பட  5 பேர் மீது சிபிஐ குற்றபத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

இந்நிலையில் 
இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக்கோரி  முன்னாள் ஐஜி  பிரமோத் குமார் தரப்பில் கோவை சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான  விசாரணை  சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் பிரமோத் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்நிலையில் வழக்கு மீது மேல் விசாரணை நடத்த உத்தரவு அளித்த நிலையில் கோவை சிபிஐ நீதிமன்றம் ஐ.ஜி பிரோமத் குமாரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் வருகின்ற நவம்பர் 28ம் தேதி வழக்கில் சேர்க்கப்பட்ட அனைவரும் நேரில் ஆஜராகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe