அசந்த நேரத்தில் கடைவீதியில் 4 பவுன் நகை திருடிய இளம்பெண் கைது

published 1 year ago

அசந்த நேரத்தில் கடைவீதியில் 4 பவுன் நகை திருடிய இளம்பெண் கைது

கோவை: கோவை வீரகேரளம் பொன்னுசாமி நகரை சேர்ந்தவர் ரவி மனைவி மலர்(48). இவர் சம்பவத்தன்று பொருட்களை வாங்க கோவை கடைவீதிக்கு வந்தார்.

பின்னர் பொருட்களை வாங்கி விட்டு பஸ்சில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரோ அவரது கைப்பையில் இருந்த 4 பவுன் தங்க செயினை திருடி தப்பி சென்று விட்டார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மலர் வடவள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், நகை திருடியது கடலூர் நெல்லி குப்பத்தை சேர்ந்த சுரேஷ் மனைவி ரேவதி(28) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து நகையை மீட்டனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe