குப்பை கொட்டுவதில் தகராறு முதியவரை தாக்கிய வாலிபர் கைது…

published 1 year ago

குப்பை கொட்டுவதில் தகராறு  முதியவரை தாக்கிய வாலிபர் கைது…

கோவை: கோவைப்புதுரை சேர்ந்தவர் முருகேசன் (64). இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் ரவி (26). இரு வீட்டு குடும்பத்தாருக்கும் வீட்டருகே குப்பை கொட்டுவது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதேபோல் நேற்று அவர்களிடையே மீண்டும் தகராறு எழுந்தது. இதில் ஆத்திரமடைந்த ரவி தகாத வார்த்தைகளால் பேசி முருகேசனை தாக்கினார். 

இதுகுறித்து முருகேசன் குனியமுத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ரவியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe