கோவையில் வாக்குவாதம் செய்த தந்தையை கத்தியால் குத்திய மகன்…

published 1 year ago

கோவையில் வாக்குவாதம் செய்த தந்தையை கத்தியால் குத்திய மகன்…

கோவை: கோவையில் தந்தையை கத்தியால் குத்திய மகனை போலீசார் கைது செய்தனர்.

கோவை சரவணம்பட்டி விநாயகபுரம் அன்னை வேளாங்கண்ணி நகரை சேர்ந்தவர் ரமேஷ்(52). இவரது மகன் பூபாலன்(26). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பூபாலனுக்கும், அவரது தந்தைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பூபாலன் தகாத வார்த்தைகளால் பேசி அவரது தந்தை ரமேசை கத்தியால் குத்தினார்.

இதில் அவருக்கு கழுத்து உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் ரமேசை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக சரவணம்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தந்தையை கத்தியால் குத்திய மகன் பூபாலனை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe