பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலம் எப்போது திறக்கப்படுகிறது தெரியுமா?

published 1 year ago

பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலம் எப்போது திறக்கப்படுகிறது தெரியுமா?

கோவை: பெரியநாயக்கன்பாளையம் சந்திப்பில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை தமிழக முதலமைச்சர் திறந்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் 1.85 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு தொடங்கிய இந்த மேம்பால  கட்டுமானப்பணிகள் ஒன்றரை ஆண்டுகளில் முடிவடையும் என்று கூறப்பட்டது.

ஆனால் மேம்பாலம் கட்டிமுடிக்கவும், சர்வீஸ் சாலைகள் அமைக்கவும் காலதாமதமானது. இதனால் அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

குடிமராமத்து பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ளதாகவும், இதன் சோதனை ஓட்டம்  நடைபெறும் என்று கோவை ஆட்சியர் கிராந்தி குமார் தெரிவித்துள்ளார்.

மொத்தம் ரூ.115 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த நான்கு வழிச்சாலை மேம்பாலம் விரைவில் திறப்பு விழா காணப்பட உள்ளது.

கோவையில் செம்மொழிப்பூங்கா அமைக்க முதலமைச்சர் ஸ்டாலின் வரும் 18ம் தேதி கோவை வருகிறார். அப்போது பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலத்தை திறந்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது பெரியநாயக்கன்பாளையம் சுற்றுவட்டாரப்பகுதி மக்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe