வெள்ள நிவராண பணிகளை பொது மக்கள் பாராட்டி இருக்கின்றனர்- தமிழக சபாநாயகர் அப்பாவு...

published 1 year ago

வெள்ள நிவராண பணிகளை பொது மக்கள் பாராட்டி இருக்கின்றனர்- தமிழக சபாநாயகர் அப்பாவு...

கோவை: கோவை விமான  நிலையத்தில் தமிழக சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் கலைஞர்  கருத்தரங்கம் நடத்தப்பட்டு வருகின்றது.
கோவையில் இன்று பள்ளி,கல்லூரி என இரு இடங்களில் கருத்தரங்கம் நடைபெறுகின்றது.

வெள்ள நிவராண பணிகளை பொது மக்கள் பாராட்டி இருக்கின்றனர். மத்திய குழு நேற்று வந்து தமிழக அரசு சிறப்பாக 
பணியாற்றி இருக்கின்றது என பாராட்டி இருக்கின்றது. குறைசொல்வது பல ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றியதை கொச்சை படுத்துவதை போன்றது. பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு  உதவிகள் செய்யப்பட்டுள்ளது. நிவாரண நிதி அமைச்சர் தமிழகத்தை சேர்ந்தவர். அவரிடம் சொல்லி சீக்கிரம் நிவாரண நிதி வாங்கி கொடுக்க வேண்டும் என்றார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe