கோவைக்கு விசிட் அடித்த பல்வேறு நகரங்களின் மேயர்கள்.. ஸ்மார்ட் சிட்டி பணிகளால் வியப்பு..!

published 1 year ago

கோவைக்கு விசிட் அடித்த பல்வேறு நகரங்களின் மேயர்கள்.. ஸ்மார்ட் சிட்டி பணிகளால் வியப்பு..!

கோவை:  கோவை மாநகராட்சியில் உள்ள ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை பார்வையிடுவதற்காக, ஜெய்ப்பூர், ஸ்ரீநகர், புவனேஸ்வர், பீம்பிரி சின்ஷவாட், பெங்களுரு, ரூர்கேலா என  பல்வேறு நகரங்களிலிருந்து மேயர்கள், துணை கமிஷனர்கள், மாநில உயர் அதிகாரிகள் கொண்ட குழுவினர் வந்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து கோவை அவிநாசி ரோட்டில் உள்ள தனியார் ஓட்டலில் தேசிய அளவிலான ஸ்மார்ட் சிட்டி பணிகள் குறித்த கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. இதற்கு கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி தலைமை வகித்து வரவேற்புரை ஆற்றினார்.

இந்த கருத்தரங்கில் உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், முத்தண்ணன்குளம் உள்ளிட்ட 7 குளங்களில் நடைபெற்ற வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் குறித்தும், திட்டங்கள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.  இதில் கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், ஸ்மார்ட் சிட்டி பணிகள் இயக்குனர்  குணால் குமார், மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், துணை மேயர் வெற்றி செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து உக்கடம் பெரியகுளம், ஐ லவ் கோவை செல்பி பாயிண்ட், பந்தய சாலை மீடியா டவர் மற்றும் வாலாங்குளம் மேம்பாலத்தின் கீழ் உள்ள கட்டமைப்பு என ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை பார்வையிட்டு திட்டப்பணிகளின் செயல்பாடுகள் குறித்து அக்குழுவினர் அறிந்து கொண்டனர்.

இதன் மூலம் தொழில்நுட்பம், நீர் மேலாண்மை உள்ளிட்ட பணிகளை மேயர்கள், மாநகராட்சி கமிஷனர்கள், மாநில உயர் அதிகாரிகள் அறிந்துகொண்டு, அதனை தங்களது நகரங்களில் செயல்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பாக இந்த கருத்தரங்கம் அமையும் என்று மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe