ஒண்டிப்புதுாரில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட ஜோதிடர் உடல்

published 1 year ago

ஒண்டிப்புதுாரில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட ஜோதிடர் உடல்

கோவை: கோவை ஒண்டிப்புதுாரை சேர்ந்தவர் ஆனந்தகிருஷ்ணன், 57. இவரது மனைவி செல்வமணி, 52. இவர் தனது, 2 மகன்களை அழைத்து கொண்டு தனியாக சென்று விட்டார்.

தனியாக வசித்து வந்த ஆனந்த கிருஷ்ணன் சில நாட்களாக வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. இந்நிலையில் வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் செல்வமணியிடம் தெரிவித்தனர்.

அவர் வந்து பார்த்த போது வீட்டுக்குள் ஆனந்த கிருஷ்ணன் துாக்கில் தொங்கிய நிலையில், அழுகி பிணமாக கிடந்தார். இதுகுறித்து சிங்காநல்லுார் போலீசார் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe