விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி

published 1 year ago

விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: தே.மு.தி.க தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு  மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்துக்கு ஏற்பட்ட உடல் நலக்கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 12ம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவர், கட்சி பொதுக்குழுவில் கலந்து கொண்டார்.

உடல் நிலை மோசமாக உள்ள தங்கள் தலைவரை ஒரு பொம்மை போல் பொதுக்குழுவுக்கு அழைத்து வருவது சரியல்ல என்று தே.மு.தி.க நிர்வாகிகளே ஆதங்கத்தை வெளிப்படுத்திய நிலையில் கடந்த 26ம் தேதி அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இதனால் அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமாக நடைபெறும் பரிசோதனைக்காகவே  அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கட்சி அறிக்கை வெளியிட்டது.

இதனிடையே விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தே.மு.தி.க., வெளியிட்டுள்ள அறிக்கையில்,  "மருத்துவ பரிசோதனையில் கேப்டனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மூச்சுவிடுவதில் சிரமம் இருப்பதால் வென்டிலேட்டர் சிகிச்சை கொடுக்கப்படுகிறது." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe