பொங்கல் பரிசு தொகுப்பை அறிவித்தது தமிழக அரசு.. என்னென்ன பொருட்கள்..? ரொக்கம்?

published 1 year ago

பொங்கல் பரிசு தொகுப்பை அறிவித்தது தமிழக அரசு.. என்னென்ன பொருட்கள்..? ரொக்கம்?

சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்கப்பட உள்ள பொருட்கள் குறித்த விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில், விலையில்லா கரும்பு, சர்க்கரை, வேட்டி சேலை, பொங்கல் வைப்பதற்கு தேவையான பொருட்கள் வழங்கப்படுவது வழக்கம்.

கடந்த 2021ம் ஆண்டு தமிழக அரசு சார்பில் அறிவித்த பொங்கல் பரிசு தொகுப்பில், பொருட்களுடன் ரூ.2000 ரொக்கமும் வழங்கப்பட்டது.

2022ம் ஆண்டு பொங்கல் பரிசுத்தொகுப்பில் 21 பொருட்கள் வழங்கப்பட்டன. ஆனால், ரொக்கம் எதுவும் வழங்கப்படவில்லை.

இதனிடையே கடந்தாண்டு பொங்கல் பண்டிகையின் போது தகுதி வாய்ந்த அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டும் தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரையுடன், ரூ.1,000 ரொக்கம் வழங்கப்பட்டது.

இதனால் இந்தாண்டும் ரொக்கம் அறிவிக்கப்படும் என்று ஏழை, நடுத்தர மக்கள் எதிர்பார்த்திருந்தனர்.

இதனிடையே, பொங்கலுக்கு வழங்கப்படும் விலையில்லா தொகுப்பு அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது

அதன்படி, தமிழகத்தில் வசிக்கும் 2 கோடியே 19 லட்சம் குடும்பத்தினருக்கு, தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கரும்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ரொக்கம் வழங்குவது தொடர்பான எந்த ஒரு அறிவிப்பும் இடம்பெறாமல் இருந்த நிலையில் ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது மக்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe