மருந்து கடை உரிமையாளர் கொலை விவகாரம்- கோவையில் வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்...

published 1 year ago

மருந்து கடை உரிமையாளர் கொலை விவகாரம்- கோவையில் வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்...

கோவை: சென்னையில் மருந்து கடை உரிமையாளர் மாமுல் தராததால்  வெட்டி கொலை செய்யப்பட்ட   சம்பவத்தை கண்டித்து மாநிலம் முழுவதும் , தமிழ்நாடு வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.   

இந்நிலையில் வணிகர்களுக்கு சிறப்பு சட்டம் ஏற்ற கோரியும்,பாதிக்கப்பட்ட வணிகனுக்கு ஒரு கோடி நிதியும்,குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க கோரியும்,தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையினர் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு 30க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் அவரது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டம் மண்டல தலைவர் சுதர்சன் மாநில துணைத்தலைவர் தங்கசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கடை உரிமையாளர்கள் நிர்வாகிகள் உறுப்பினர்கள்   கலந்துகொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe