முதியவர்களே கவனம்! கோவையில் ஏ.டி.எம்., மையத்தில் உதவி கேட்டவரிடம் மோசடி

published 1 year ago

முதியவர்களே கவனம்! கோவையில் ஏ.டி.எம்., மையத்தில் உதவி கேட்டவரிடம் மோசடி

கோவை: கோவையில் ஏடிஎம்-ல் பணம் எடுத்து தருவது போல நடித்து முதியவரிடம் ரூ. 31,500 நூதன மோசடி நடைபெற்றது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை ஒப்பணக்கார வீதியை சேர்ந்தவர் சிராஜூதீன்(62). ஆட்டோ டிரைவர். இவர் கடந்த 4ம் தேதி ஒப்பணக்கார வீதியில் உள்ள ஏடிஎம் சென்டருக்கு பணம் எடுக்க சென்றார். அப்போது அவர் அங்கு வந்த நபரிடம் ஏடிஎம் கார்டை கொடுத்து பணம் எடுத்து கொடுக்குமாறு கேட்டார்.

ஏ.டி.எம்., ரகசிய எண்ணை கேட்டு தெரிந்து கொண்ட அந்த நபர் ஏடிஎம் சென்டரில் பணம் இல்லை என கூறி வேறொரு ஏடிஎம் கார்டை சிராஜூதீனிடம் திருப்பி கொடுத்து சென்று விட்டார். பின்னர் சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து 3 கட்டங்களாக ரூ. 31,500 எடுக்கப்பட்டதாக சிராஜூதின் செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் வந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த சிராஜூதீன் வெரைட்டிஹால் ரோடு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம் எடுத்து கொடுப்பது போல நடித்து வேறொரு ஏடிஎம் கார்டை கொடுத்து ரூ.31,500 மோசடியில் ஈடுபட்ட மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe