கோவையில் எத்தனை லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் தொகுப்பு..? எத்தனை கோடிகளில் தெரியுமா?

published 1 year ago

கோவையில் எத்தனை லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் தொகுப்பு..? எத்தனை கோடிகளில் தெரியுமா?

கோவை: பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் கோவையில் விறுவிறுப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின் போது அரசு சார்பில் பொதுமக்களுக்கு விலையில்லா பரிசு தொகுப்புகள் வழங்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில், நடப்பு ஆண்டுக்கான பரிசு தொகுப்புகள் குறித்த அறிவிப்பு கடந்த வாரம் வெளியானது.  அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கரும்பு உள்ளிட்ட பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது.

தொடர்ந்து இதற்கான டோக்கன் வழங்கப்பட்டு, தற்போது தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

கோவை மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் 11 லட்சத்துக்கும் அதிகமான குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.

இவர்களுக்கு மாவட்டம் முழுவதிலும் உள்ள 1,418 ரே‌ஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.

கோவை மக்களுக்கு மட்டும் ரூ.122.40 கோடி மதிப்பீட்டில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுகிறது. மொத்தம் 11 லட்சத்து 4 ஆயிரத்து 836 குடும்ப அட்டைதாரர்களுக்கு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe