பழுதான மின் ஒயரை சரிசெய்த நபர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு...

published 1 year ago

பழுதான மின் ஒயரை சரிசெய்த நபர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு...

கோவை: கோவை சவுரிபாளையம் மாதா கோயில் தெருவை சேர்ந்தவர் ஜெப சிங்(41). திருமணமான இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் ஜெபசிங் வீட்டில் பழுதான மின் ஒயரை சரி பார்த்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். 

இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனே 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஜெபசிங்கை பரிசோதனை செய்துவிட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe