போதை பொருட்களை தடுக்க சைக்கிள் பேரணி- பேரணியில் கலந்து கொண்ட காவல் ஆணையாளர்...

published 1 year ago

போதை பொருட்களை தடுக்க சைக்கிள் பேரணி- பேரணியில் கலந்து கொண்ட காவல் ஆணையாளர்...

கோவை: தமிழகத்தில் போதைப் பொருட்களை தடுப்பதற்கு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் போதைபொருட்களை தடுக்கும் விதமாக இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இருந்து சைக்கிள் பேரணி நடைபெற்றது.

சைக்கிள் பேரணியில் 16 வயது முதல் பெரியவர் வரை கலந்து கொண்டனர். இந்த பேரணியை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்து கலந்து கொண்டார்.பேரணியில் சுமார் 70-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பேரணி காவல் ஆணையர் அலுவலகத்திலிருந்து தொடங்கி டவுன் ஹால்,செட்டி வீதி,பேரூர், பச்சாபாளையம்,ஆலந்துறை, மாதம்பட்டி,சாடி வயல்,ஈசா யோகா சென்று அடையும்.

அதன் பின் அங்கிருந்து புறப்பட்டு அதே வழியாக வந்து இறுதியாக அவிநாசி சாலையில் உள்ள பி.ஆர்.எஸ் மைதானத்தில் நிறைவடைகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe