கோவையில் பைனான்சியரிடம் ரூ. 5 கோடி மோசடி

published 1 year ago

கோவையில் பைனான்சியரிடம் ரூ. 5 கோடி மோசடி

கோவை: கோவையில் பைனான்சியரிடம் ரூ. 5 கோடி மோசடி செய்ததாக தம்பதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கோவை கணபதி கோபால்சாமி கோயில் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார்(57). பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவரிடம் காளப்பட்டியை சேர்ந்த தொழில் அதிபர் கடந்த 2019, 20ம் ஆண்டில் முறையே 2 கோடி மற்றும் 3 கோடி ரூபாய் கடன் பெற்றதாக கூறப்படுகிறது.

அவர் நெடுஞ்சாலை துறை ஒப்பந்த பணிக்காக செந்தில்குமாரிடம் பணம் பெற்றதாக தெரிகிறது. அந்த பணத்தை ஓராண்டுக்குள் திருப்பி செலுத்தி விடுவதாக தொழிலதிபர் தெரிவித்துள்ளார்.

ஆனால் கோவிட் காரணமாக அவர் பணம் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இந்தநிலையில், செந்தில்குமார், அவிநாசி ரோட்டில் உள்ள தொழிலதிபர் அலுவலகத்துக்கு சென்று தனக்கு தர வேண்டிய பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார்.

அப்போது அங்கிருந்த சிலர் தகாத வார்த்தைகளால் பேசி செந்தில்குமாரை மிரட்டி உள்ளனர். இது குறித்து பைனான்சியர் செந்தில்குமார் பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில், போலீசார் நம்பிக்கை மோசடி, மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் தொழிலதிபர், அவரது மனைவி மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe