கோவையில் பெண்ணின் வாட்ஸ்-ஆப்-க்கு மெசேஜ் அனுப்பி தொல்லை கொடுத்தவர் மீது வழக்கு!

published 1 year ago

கோவையில் பெண்ணின் வாட்ஸ்-ஆப்-க்கு மெசேஜ் அனுப்பி தொல்லை கொடுத்தவர் மீது வழக்கு!

கோவை: கோவை உக்கடம் ஜிஎம் நகரை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவர் உக்கடத்தில் உள்ள மருந்து கடையில் வேலை பார்த்து வருகிறார்.

இவரது செல்போனுக்கு கடந்த 6ம் தேதி வாலிபர் ஒருவர் வாட்ஸ் ஆப்பில் பேசி வாய்ஸ் மெசேஜ் அனுப்பினார். இந்தநிலையில், நேற்று மருந்து கடைக்கு வந்த அதே வாலிபர் இளம்பெண்ணிடம் ஏன் எனது மெசேஜூக்கு ரிப்ளை செய்யவில்லை என கேட்டு தகராறில் ஈடுபட்டார்.

இது குறித்து அந்த இளம்பெண் உக்கடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் கோவையை சேர்ந்த சாதிக்(28) என்பவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe