திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த சிறுவன் தப்பி ஓட்டம்...

published 1 year ago

திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த சிறுவன் தப்பி ஓட்டம்...

கோவை: கோவையில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு உக்கடம் பகுதயில் உள்ள சாலையோர சிறார்களின் மறுவாழ்வு இல்லமான டான் பாஸ்கோ அன்பு இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த 17 வயது சிறுவன் அங்கிருந்து தப்பி ஓடினான்.

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் நடந்த திருட்டு வழக்கு தொடர்பாக சிங்காநல்லூர் போலீஸார் வழக்கு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அங்கு கைப்பற்றப்பட்ட கைரேகை அடிப்படையில் 17 வயது சிறுவன் ஒருவரை பிடித்து விசாரணை செய்த போலீஸார் அவன் தான் அந்த திருட்டு வழக்கில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் பிடிப்பட்ட சிறுவன் மீது ஏற்கனவே ஒரு திருட்டு வழக்கு இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து பிடிப்பட்ட சிறுவனை போலீஸார் உக்கடம் பகுதியில் உள்ள டான் பாஸ்கோ அன்பு இல்லத்தில் அடைத்தனர். இந்நிலையில் அன்பு இல்லத்தில் இருந்த சிறுவன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளான். இது குறித்து பெரியகடை வீதி போலீஸார் வழக்கு பதிவு செய்து, தப்பிச் சென்ற சிறுவனை தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe