கோவையில் வனத்துறை அமைச்சருக்கு ஆபரேசன்.. மருத்துவமனையில் அனுமதி!

published 1 year ago

கோவையில் வனத்துறை அமைச்சருக்கு ஆபரேசன்.. மருத்துவமனையில் அனுமதி!

கோவை: தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மதிவேந்தனுக்கு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் குடலிறக்க அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது.
தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மதிவேந்தன். இவர் குடலிறக்க (ஹெர்னியா) நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். 

இதனைத் தொடர்ந்து நேற்று அமைச்சர் மதிவேந்தன் கோவை ராமநாதபுரத்தில் உள்ள ஜெம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் குடலிறக்க அறுவை சிகிச்சை செய்ய உள்ளனர்.. அறுவை சிகிச்சை முடிந்து அமைச்சர் டாக்டர்களின் கண்காணிப்பில் வைக்கப்படுவார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் மதிவேந்தன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தொண்டர்கள், நிர்வாகிகள் வரக்கூடும் என்பதால் மருத்துவமனை முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe