கோவையில் எஸ்.பி.வேலுமணியை தீவிரவாதி என சித்தரித்து புகைப்படத்துடன் போஸ்டர்கள்...!

published 1 year ago

கோவையில் எஸ்.பி.வேலுமணியை தீவிரவாதி என சித்தரித்து புகைப்படத்துடன் போஸ்டர்கள்...!

கோவை: கோவை குனியமுத்தூர் பகுதியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி புகைப்படத்துடன் தீவிரவாதி என்று  நோட்டீஸ் ஓட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூறி அதிமுகவினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

கோவை குனியமுத்தூர் அருகே சுகுணாபுரம் பகுதியில் முன்னாள் அமைச்சரும் தற்போதைய தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணியின் இல்லம் உள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் மூன்று இடங்களில் எஸ்.பி. வேலுமணி புகைப்படத்துடன் தீவிரவாதி என்று அச்சிடப்பட்ட நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டிருந்துள்ளது.

அதன் புகைபடங்கள் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் அதனை பார்த்த அதிமுகவினர்  குனியமுத்தூர் காவல் நிலையத்தில் நேற்றிரவு ஒன்று திரண்டு சுவரொட்டி ஒட்டிய நபரை கண்டறிந்து   உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தனர். காவல்துறையினர் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை தொடர்ந்து அதிமுகவினர் கலைந்து சென்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe