வெள்ளலூரில் வீடு புகுந்து கொள்ளை!

published 1 year ago

வெள்ளலூரில் வீடு புகுந்து கொள்ளை!

கோவை: கோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்தவர் பேச்சிமுத்து மனைவி அங்கயர்கண்ணி(53). இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 15ம் தேதி வீட்டை பூட்டி விட்டு ஈரோட்டில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்றார்.

பின்னர் அங்கு சில நாட்கள் தங்கி விட்டு கோவை திரும்பினார். அப்போது வீட்டுக்கு சென்று பார்த்த போது, வீட்டு பீரோவில் இருந்த 4 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 24 ஆயிரம் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

மர்ம நபர் பூட்டை உடைத்து வீட்டுக்குள் நுழைந்து திருடி சென்றுள்ளார். இது குறித்து அங்கயர்கண்ணி போத்தனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட நபரை தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe